search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி பார்வதி"

    சந்திரபாபுநாயுடு மீது என்.டி.ராமராவ் மனைவி தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் மே 13ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #ChandrababuNaidu #ndramarao #propertycase

    நகரி:

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் 2005-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை நடந்தபோது சந்திரபாபு நாயுடு வழக்கு விசாரணைக்கு தடை பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் பல ஆண்டுகளாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஐதராபாத் லஞ்ச ஒழிப்பு துறை கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு என்.டி.ராமராவ் மனைவி லட்சுமி பார்வதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


    இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து லட்சுமி பார்வதி இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #ChandrababuNaidu #ndramarao #propertycase

    என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் எழுந்திருப்பது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LakshmiParvathi
    விஜயவாடா:

    மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி; தெலுங்கு எழுத்தாளர்.

    முதல் மனைவி பசவதாரகம், 1985-ம் ஆண்டில் புற்றுநோயால் மரணம் அடைந்த பின்னர் லட்சுமி பார்வதியை 1993-ம் ஆண்டில் ராமராவ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

    என்.டி.ராமராவ் மறைவுக்கு பின்னர் கட்சி சந்திரபாபு நாயுடுவசம் போன பின்னர், லட்சுமி பார்வதி என்.டி.ஆர். தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கி சிறிது காலம் நடத்தினார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்.

    இந்த நிலையில் லட்சுமி பார்வதி மீது நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற ஆனந்த் பால் என்பவர் வினுகொண்டா போலீஸ் நிலையத்தில் செக்ஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் வினுகொண்டா மண்டல் உப்பர் அப்பளம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு லட்சுமி பார்வதியை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன்.

    கடந்த 18 மாதங்களாக அவர் என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல்கள் அனுப்பி வருகிறார். அவர் ஆபாச படங்களுக்கான இணையதள தொடர்புகளையும், படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார்.

    அவரது ஆசைக்கு இணங்கி நடந்தால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் நல்ல பதவி பெற்றுத்தருவதாகவும் கூறினார்.

    நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன். ஆனால் அவரோ முறையற்ற வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார். இது எனது குடும்ப வாழ்க்கையில் இடையூறாக அமைந்துள்ளது. அவரது விருப்பத்துக்கு நான் அடிபணியாததால், அவர் என்மீது கோபம் கொண்டுள்ளார். நான் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார்.

    எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறி உள்ளார்.

    ஆதாரங்கள்

    மேலும் அவர் தனக்கு லட்சுமி பார்வதி அனுப்பியது என்று சொல்லி செல்போன் ‘ஸ்கிரீன்ஷாட்’களையும், சில படங்களையும் ஆதாரங்களாக போலீசிடம் அளித்துள்ளார்.

    இதுபற்றி வினுகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.வி. சீனிவாச ராவ் கூறும்போது, “கோட்டி என்ற ஆனந்த் பால் அளித்த புகாரை பெற்றுக்கொண்டோம். சட்ட ஆலோசனை பெற்று, ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அதன்பின்னரே வழக்கு பதிவு செய்வோம்” என கூறினார்.

    ஆந்திர சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே கட்டமாக 11-ந்தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் லட்சுமி பார்வதி மீதான இந்த செக்ஸ் புகார், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.##LakshmiParvathi
    காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் என்.டி.ராமராவ் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று சந்திரபாபு நாயுடுவுக்கு லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ChandraBabuNaidu #NTRamarao
    நகரி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஐதராபாத்தில் உள்ள என்.டி.ராமராவ் சமாதி முன் மவுனதீட்சை மேற்கொண்டார்.

    காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆந்திர மக்களின் தன்மானத்தை டெல்லியில் அடகு வைப்பதை தடுக்க மறைந்த முதல்வரும் எனது கணவருமான என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

    அவர் உயிரோடு இருந்த வரை காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார். அப்படிப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியையும் முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு என் கணவரின் மரணத்திற்கும் சந்திரபாபு நாயுடு காரணமானார். தற்போது என்.டி.ஆர். எதிர்க்கட்சியாக பார்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததை அவர் ஆத்மா மன்னிக்காது.

    சந்திரபாபு நாயுடு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். ஆனால் என் கணவர் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த பிறகு தேர்தல் பிரசாரத்தின் போது என்.டி.ராமராவின் பெயரையோ படத்தையோ சந்திரபாபு நாயுடு உபயோகிக்கக்கூடாது. இதற்காக நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் லட்சுமி பார்வதி தெரிவித்தார். #ChandraBabuNaidu #NTRamarao
    ×